சம்பளபடி பாக்கி: ஏர் இந்திய விமானிகள் ஸ்டிரைக்- விமானங்கள் தாமதம்
மும்பை: ஏர் இந்தியா விமானிகளுக்கு வெளிநாட்டு பயணத்தின் போது வழங்கப்படும் பயணப்படி கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களை இயக்க மறுத்து விமானிகள் போராட்டம் நடத்தினர். இதனால் விமானப் போக்குவரத்து தாமதமானது.
வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு அங்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு பயணப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏர்இந்தியா நிறுவனத்தின் விமானிகளுக்கு கடந்த 5 மாதங்களாக பயணப்படி வழங்கவில்லை.
இதனையடுத்து நேற்று மும்பையில் இருந்து நியூவாக், ஜெத்தா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களை இயக்க மறுத்து விமானிகள் போராட்டம் நடத்தினர். இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவன விமானிகள் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான பயணப்படியில் பாதி தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பயணப்படி வழங்கவில்லை என்றார்.
விமானங்கள் புறப்பட தாமதமானது உண்மை தான். ஆனால் விமானிகள் போராட்டம் நடத்தவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications