இந்தியாவின் முடிவால் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: கனிமொழி

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
சென்னை: அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதால் இலங்கையில் வசிக்கும் மீதமுள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடந்த அத்துமீறல்களை கண்டித்து அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா உள்பட 24 நாடுகள் வாக்களித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது.

மனித உரிமை கவுனிசிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அதில் தற்போது வெறும் 7 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. இந்தியா என்ன செய்கிறது என்று பார்த்துவிட்டு முடிவெடுப்போம் என்று சில நாடுகள் முடிவு செய்திருந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இதையடுத்து பல நாடுகள் இலங்கைக்கு எதிராகத் திரும்பின. இந்நிலையில் தீர்மானத்தை தோற்கடிக்க பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கேட்டுக் கொண்டிருந்தது இலங்கை.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் மட்டும் போதாது. அந்நாட்டில் நடந்த அத்துமீறல்களை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருப்பதால் இலங்கையில் உள்ள மீதமிருக்கும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அங்கிருக்கும் தமிழர்களை மீழ்குடியேற்றம் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+