தமிழர்களிடம் கலவர பீதியை பரப்பும் இலங்கை.. யாழ்ப்பாணத்தில் ராணுவம் குவிப்பு
யாழ்ப்பாணம்: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நிறைவேறினால் தமிழர் பகுதிகளில் பெரும் கலவரம் வெடிக்கும், ரத்த ஆறு ஓடும் என்பது போல பீதியைக் கிளப்பி வருகிறார்களாம். மேலும் யாழ்ப்பாணத்திலும் தேவையில்லாமல் பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறதாம்.
இலங்கையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் பகுதிகள், கொழும்பில் வசித்து வரும் தமிழர்கள் பெரும் பீதியுடன் காணப்படுகின்றனர். சிங்களர்கள் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இருந்தாலும் பூணைக்கு இப்போதாவது ஒரு மணியைக் கட்ட சர்வதேச சமுதாயம் முன்வந்துள்ளதே என்ற வேகத்தில் அவர்கள் உள்ளனர். எனவே என்ன வந்தாலும் சந்திப்போம், அமெரிக்க தீர்மானம் வெற்றி பெறட்டும் என்ற மன நிலையில் அவர்கள் உள்ளனராம்.
யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் சாகச நிகழ்ச்சி என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினர் சர்க்கஸ் காட்டிக் கொண்டுள்ளனராம். இதற்காக கடந்த 2 நாட்களாகவே ராணுவத்தினர் பெருமளவில் வந்து குவிந்துள்ளனர். ஆயுதங்களைப் பிடித்தபடி பஸ்களில் வந்திறங்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் மன ரீதியாக மக்களை ராணுவம் அச்சுறுத்தி வருகிறதாம். இருந்தாலும் யாழ்ப்பாண மக்களிடையே ஒருவிதமான திடமான மன நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கொழும்பில் சிங்கள ரவுடிக் கும்பல்கள் இப்போதே தமிழர்களை மிரட்ட ஆரம்பித்து விட்டனவாம். தீர்மானம் எங்களுக்குப் பாதகமாக இருந்தால் அவ்வளவுதான் என்று தமிழர்களை அவர்கள் மிரட்டி வருகிறார்களாம். அதைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கிறதாம் போலீஸ்.
பல தமிழர்கள் இந்த மிரட்டல்களால் அச்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனராம்.
பல தமிழர்கள் இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. அலுவலகம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பி தங்களுக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.
சிங்களர்கள் மீண்டும் இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டால் அதிலிருந்து தப்பிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழர்களும், தமிழர் கட்சிகளும் மேற்கொண்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications