இலங்கை தீர்மானம்: எஸ்.எம்.கிருஷ்ணா மீது கருணாநிதி கடும் தாக்கு

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டாமென்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு இந்திய அரசு இந்த பிரச்சனையில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாகவும் செய்தி வந்துள்ளதே?
பதில்: எஸ்.எம்.கிருஷ்ணா எனக்கு நல்ல நண்பர் என்ற போதிலும், எப்போதும் நிலைமைகளை உணர்ந்து பதில் சொல்லக் கூடியவரல்ல. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை வந்த போதும் கிருஷ்ணா தான் இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அண்டை நாடான இலங்கைப் பிரச்சனையிலே, அந்த நாட்டிற்கு எதிராக ஒரு நிலை எடுப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்ற பொருள்பட மாநிலங்களவையில் கூறிய காரணத்தால் மாநிலங்களவை கழக உறுப்பினர்கள் திருச்சி சிவாவும், கனிமொழியும் குறுக்கிட்டு, தென்னாப்பிரிக்கா, பங்காளதேஷ், போன்ற அண்டை நாட்டுப் பிரச்சனைகளிலேயே இந்தியா எடுத்த நிலை என்ன என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் அளிக்கவில்லை. அதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது பற்றி தீவிரமாக எதிர்த்ததின் அடிப்படையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் விவரங்கள் முழுமையாக தனக்கு கிடைக்கா விட்டாலும், இலங்கைத் தமிழர்கள் சமமாகவும், சுயமரியாதையுடனும் மதிப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அந்த தீர்மானத்தை ஆதரிக்கவே இந்தியா விரும்புகிறது என்று பதில் அளித்து, அதனை தமிழகத்தைத் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றார்கள் என்று ஏற்கனவே செய்தி வந்துள்ளது.
இதற்கு பிறகும் எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் இன்னும் இந்தியா ஐ.நா.தீர்மானம் குறித்து இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.
இருந்தாலும், மத்திய அமைச்சரவையில் தமிழ் உணர்வுள்ள அமைச்சர்களான ஜி.கே.வாசன், நாராயணசாமி போன்றவர்கள் இந்த பிரச்சனையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறி வருவதும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
எனவே பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்க மாட்டார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications