உகாதி: தெலுங்கு, கன்னட மக்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும்- ஜெயலலிதா வாழ்த்து

இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி திருநாளில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டு இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் செயல் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
தமிழ் மக்களோடு இணைந்து சகோதர, சகோதரிகளாய் தூய சொந்தங்களாய் வாழ்ந்து வரும் தெலுங்கு மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் புத்தாண்டுத் திருநாளாம் உகாதி திருநாளில் வருங்காலம் யாவும் வளம் பெறுக, வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசுக என்று கூறி எனது இனிய நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications