நார்வே அமைச்சரவையிலிருந்ந்து எரிக்சொல்ஹெய்ம் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
நார்வே: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் பேச்சுக்கான ஏற்பாடுகளை எரிக்சொல்ஹெய்ம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications