வரி விதிப்பை கண்டித்து நாளை முதல் ஒரு வாரத்திற்கு தமிழக நகைக் கடைகள் அடைப்பு

நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்கம் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தார். இதையடுத்து ஏற்கனவே விண்ணைத் தொடும் அளவுக்கு உள்ள தங்கத்தின் விலை மேலும் உயர்ந்தது.
இந்த கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் சில நாட்கள் கழி்த்து நகைக்கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகின்றன. கடைகளைத் திறந்தாலும் தங்கம் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் தங்க நகைகள் மீதான கலால் வரியை ரத்து செய்யக் கோரிக்கை எழுப்பப்பட்டது. கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவி்ககும் வகையில் நாளையில் இருந்து 7 நாட்களுக்கு தமி்ழகத்தில் உள்ள நகைக்கடைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தில் 60,000 கடைகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications