கூடுதல் ஆவணங்களைக் கோரிய சசிகலா மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூர் நீதிமன்றம்

தமிழக முதல்வராக 1991-1996-ம் ஆண்டு பொறுப்பு வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச்நீதிமன்றத்தின் அதிரடிக்குப் பிறகு சற்று விறுவிறுவென நடந்த இந்த வழக்கில் சசிகலா தரப்பு மீண்டும் முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது.
புது காரணங்கள்
இந்த வழக்கு நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் சசிகலாவும் இளவரசியும் ஆஜராகவில்லை. சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சனை, இளவரசிக்கு நீரிழிவு நோய் என்பதால் இருவரும் ஆஜராகவில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
கூடுதல் ஆவணங்கள்
மேலும் பல்வேறு சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி சசிகலா "விளக்கமாகப்" பதிலளிக்க கூடுதல் ஆவணங்களைத் தரக் கோரி ஏற்கெனவே சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்றைய விசாரணையின் போது நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கால அவகாசம்
ஆனாலும் விடாத வழக்கறிஞர் மணிசங்கர், கூடுதல் ஆவணங்களைத் தரக்கோரும் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மறுபடியும் ஒரு அஸ்திரத்தை வீசினார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் செளடா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலங்களை தொடர்ந்து பெறுவதற்காக வழக்கின் விசாரணையை வரும் 12- ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications