தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இந்த தடையானது வரும் 15ம் தேதி முதல் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தடை காலம் 45 நாட்களுக்கு அதாவது வரும் மே மாதம் வரையில் நீடிக்கிறது.
இந்த தடைகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த தடை காரணமாக தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுள் மீன்பிடிக்க செல்லாது. இந்த கால கட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரித்தல், மீன் வலைகளை பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
கடலுக்கு செல்ல முடியாததால் விசைப்படகு மீனவர்கள் தொழில் மற்றும் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். இதனால் அரசு அவர்களுக்கு ரூ.4,000 நிவாரண தொகையாக வழங்கி வருகிறது. தூத்துக்குடியில் இந்த தடை காலம் 15ம் தேதி முதல் துவங்குகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications