தந்தை வழியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தரான கல்யாணி மதிவாணன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியை கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை இந்த பொறுப்புக்கு நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை இதே பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார். இந்த பல்கலைக்கழக வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன் என்றார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத் துறை தலைவராக பணியாற்றிய கல்யாணி மதிவாணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
முன்னாள் துணை வேந்தர் கற்பக குமரவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்தது. அதில் இருந்து சுமார் ஒரு ஆண்டு காலம் பல்கலைக்கழகம துணை வேந்தர் இன்றி செயல்பட்டது. காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக துணை வேந்தர் இன்றி பட்டமளிப்பு விழா கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications