திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை இயக்க கோரிக்கை!
நாகர்கோவில்: திருச்சி-திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், குமரி எம்.பி.க்கும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டமாகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும்.
குமரி மாவட்ட பயணிகள் ஆயிரக்கணக்கானோர் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல்,திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி பயணம் செய்கின்றனர்.
மதுரையில் உயர் நீதிமன்றம், வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்கான பேர் செல்கின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து காலை 7:30 மணிக்கு அடுத்து மாலை 5:30 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தினசரி ரயில் வசதி உள்ளது. இதை போல் மறுமார்க்கத்தில் மதுரை, திருச்சியில் இருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் திருச்சி- திருநெல்வேலி வழி தடத்தில் பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கபட்டது. தமிழகத்தில் இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கபடும் முதல் பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இது ஆகும்.
இந்த ரயில் திருச்சியில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேல் இருந்து புறப்பட்டு இரவு திருச்சி செல்லும்
வகையில் இயக்கபட உள்ளது. இதில் முன்பதிவு செய்யப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகளும், குளிர்சாதன வசதி உடைய சாய்வு இருக்கை பெட்டிகளும் இருக்கும்.
இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க போதுமான வசதி வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த ரயிலை ஜுலை மாதம் வெளியிடப்படும் ரயில் கால அட்டவணையில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக மத்திய அரசையும், தென்னக ரயில்வே நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications