Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழிதவறி வேதாரண்யம் வந்த 2 இலங்கை மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்: வழிதவறி வேதாரண்யம் வந்த இலங்கை மீனவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை பரிசுத்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தயாளன் (18), சிவாஜிபிரபு (22). அந்தச இரண்டு பேரும் அவர்களுக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த மாதம் 30ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். காற்று பலமாக வீசியதால் படகு திசை மாறிச் சென்றது. இதற்கிடையே டீசல் முற்றிலும் தீர்ந்து போனது.

இதனையடுத்து காற்றின் திசையில் சென்ற அவர்களின் படகு நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை அடைந்தது.

படகில் மீன்பிடி வலையும், கொஞ்சம் மீன்களும் இருந்தது. மீனவர் அடையாள அட்டை, லைசென்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு ஆவணமும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து கடலோர காவல்படையினர் மற்றும் வேதாரண்யம் போலீசார் படகை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்பு அவர்கள் உண்மையிலேயே வழிதவறி வந்தார்களா என்பது குறித்து கடற்படை, கடலோர காவல்படை, உளவுத்துறை போலீசார், உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வழி தவறி வந்தது உறுதியானது.

இதையடுத்து இலங்கை மீனவர்கள் இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+