கட்சிப் பணியாற்றப் போகிறோம், அமைச்சர் பதவி வேண்டாம்: வயலார் ரவி, ரமேஷ், ஆசாத், குர்ஷித்
டெல்லி: மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
எங்களுக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடவே விரும்புகிறோம். அதனால் எங்களை அமைச்சர் பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
4 மத்திய அமைச்சர்கள் திடீர் என்று கூட்டாக பதவி வேண்டாம் கட்சிக்காக உழைக்கப் போகிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications