கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே கொடுத்திடுங்களேன்: பிரதமருக்கு ஜெ. மீண்டும் கடிதம்

இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்தின் தேவைக்கே ஒதுக்க வேண்டும் என்று முன்பு கோரி இருந்தேன். எனது இந்த கோரிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாக மார்ச் 31ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் அது பற்றிய விவரம் இதுவரை கிடைக்கவில்லை. 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, முதல் யூனிட்டில் அடுத்த சில நாட்களில் அணு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற இருப்பதாக நான் அறிகிறேன். அப்படி எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கி முடிவடைந்துவிட்டால், அடுத்த 20 நாளிலோ அல்லது சிறிது நாட்களிலோ முதல் யூனிட்டில் இருந்து மின் உற்பத்தி தொடங்கிவிடும்.
இந்த பின்னணியில் முந்தைய எனது கோரிக்கையை மீண்டும் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். எங்கள் மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தேவையான நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பாக தங்களிடம் இருந்து சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications