போபர்ஸ் ஊழல்: சோனியாவை விசாரிக்க விடாமல் தடுத்தார் வாஜ்பாய்: சு.சாமி மறைமுக தகவல்

கடந்த 25 வருடங்களாக உலவிக் கொண்டிருந்த, சமீ்பத்தில் சற்றே அடங்கிப் போயிருந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை தலைவரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான ஸ்டென் லின்ட்ஸ்டிரோம் வெளியிட்டுள்ள தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்திக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லை. இந்த வழக்கில் வேண்டும் என்றே அமிதாப் பச்சன் பெயரை இந்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் சேர்த்தன என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமானதாக பீரங்கி பேர ஊழலில் முக்கியப் புள்ளியான இத்தாலியைச் சேர்ந்த புரோக்கரான குவாத்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் காந்தி மிகக் கடுமையாக முயன்றார். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் தீவிரமாக முயன்றார் என்று கூறியுள்ளார் லின்ட்ஸ்டிரோம்.
இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
பாஜக கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது போபர்ஸ் விவகாரம் தொடர்பாக குவாத்ரோச்சிக்கும், சோனியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், அது குறித்து சோனியாவை விசாரிக்க அனுமதிக்க கோரியும், சுவீடன் போலீஸ் துறைத் தலைவராக இருந்த ஸ்டென் லின்ட்ஸ்டிரோம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அப்போதைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. (போபர்ஸ் தொடர்பான ஆவணங்களைத் தொடக் கூடாது என தன்னிடம் வாஜ்பாய் கூறியதாக 2007ம் ஆண்டு ஜார்ஜ் பெர்ணான்டஸ் பேட்டி அளித்தது நினைவுகூறத்தக்கது).
லின்ட்ஸ்டிரோம் எழுதிய கடிதம் மற்றும் 150 பக்க ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பியிருந்தேன். ஆனால், போபர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., குவாத்ரோச்சியிடம் விசாரணை நடத்த எவ்வளவோ முயன்றோம்; ஆனால் முடியவில்லை. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி வழக்கை மூடி மறைத்துவிட்டது.
ஆனால் லின்ட்ஸ்டிரோம் வெளிப்படுத்திய உண்மையை ஆதாரமாக வைத்து, சோனியாவிடம் விசாரணை நடத்தக் கோரி நான் மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளேன். முதலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கை முடித்துவிட்டு இந்த விஷயத்தை கையில் எடுப்பேன் என்று கூறியுள்ளார் சாமி.
பாஜகவுடன் நெருக்கமாக இருந்தாலும் சு.சாமியை வாஜ்பாய் எப்போதுமே கொஞ்ச தூரத்திலேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications