படு வேகத்தி்ல் பாய்ந்து வரும் காற்றாலை மின்சாரம்-கரண்ட் 'கட்' வெகுவாக ரத்து!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்திலிருந்து கடும் மின்வெட்டு மக்களை வாட்டி வருகிறது. இதைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஆனால் அவர்கள் வந்த பிறகுதான் மின்வெட்டு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - சென்னையைத் தவிர்த்து- பாதி நாட்கள் கரண்ட் கிடையாது என்ற நிலைதான். பெரும்பாலான பகுதிகள் எப்போதும் இருளில் மூழ்கியேக் கிடந்தன.
இந்த நிலையில் சென்னையிலும் 2 மணி நேர மின்வெட்டை அரசு அமல்படுத்தியது. தற்போது மின்வெட்டு பெருமளவில் குறையத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், காற்றாலை மின்சாரம் பெருமளவில் கிடைப்பதுதான்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றலை மூலம் மின் உற்பத்தி 1,580 மெகா வாட்டாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தி 1,998 மெகாவாட்டாக உயர்ந்தது. இதில், 30.788 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று மின்வெட்டு இல்லை.
இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறுகையில்,
நேற்று முன்தினத்தை விட நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. எனவே, நேற்று காற்றாலை மூலம் மின் உற்பத்தி கூடுதலாக கிடைத்தது. தொடர்ந்து அதிகமாக காற்று வீசினால் நமக்கு முழு அளவு மின்சாரம் காற்றாலைகள் மூலமாக பெறமுடியும்.
தொடர்ச்சியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெற முடிந்தால் தமிழ்நாட்டுக்கு மீண்டும் சீரான மின்சாரம் கிடைக்கும். இதுபோல் தினமும் வாயுபகவான் கருணை காட்டினால் சீரான மின்சாரத்தை பெறமுடியும் என்று நம்புகிறோம் என்றார்.
உற்பத்தியை குறைக்கச் சொல்லும் அரசு?:
ஆனால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியாத நிலையில் மி்ன்வாரியம் உள்ளதாம். அதிக அளவில் மின்சாரத்தை எங்களால் பெற முடியாத நிலை உள்ளது. மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது. எனவே உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மின்வாரியத்திடமிருந்து காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்குக் கோரிக்கை போயுள்ளதாம்.
இது இப்படி இருக்க நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பெரிதாக இல்லை. பல மணி நேரம் மின்சாரம் போகும் பகுதிகளில் சில மணி நேரம் மட்டுமே கரண்ட் இல்லை. சென்னையைப் பொறுத்தவரை பல இடங்களில் மின்வெட்டு இல்லை. சில இடங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே கரண்ட் கட் ஆனது. ஆனால் நேற்று மே தினம் என்பதால் தமிழகத்தில் அத்தனை தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால்தான் பெரிய அளவில் மின்சாரம் நேற்று செலவாகவில்லை. இதுவும் நேற்று மின்வெட்டு வெகுவாக குறைய ஒரு காரணம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications