ட்ரீம்லைனர் விமான பயிற்சி விவகாரத்தால் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்?
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியாவில் இந்தியன் ஏர்லைன்சை இணைப்பதற்கு முன்பு, இந்தியன் ஏர்லைன்சில் வேலை பார்த்த விமானிகளுக்கு போயிங் 787 ரக ட்ரீம்லைனர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனால் ஏர் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் விமானிகள் போர்க்கொடி தூக்கி நேற்று பணிக்கு வராமல் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல விமானிகள் உடல்நலம் சரியில்லை என்று கூறி திடீரென வேலைக்கு வராமல் கட் அடித்தனர். இதனால் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டன. மேலும் நியூயார்க் மற்றும் டொரண்டோவிற்கு செல்ல வேண்டிய 2 விமானங்கள் 16 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன.












Click it and Unblock the Notifications