யார் பெயரையும் நான் சோனியாவிடம் பரி்ந்துரைக்கவில்லை-பவார்
மும்பை: சோனியா காந்தியை கடந்த மாதம் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யாரையும் தான் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் சோனியா காந்தியை நான் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக பேசவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவரும் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
இப்போது பெயரை பரிந்துரைத்து விவாதிக்கத் தேவையில்லை. அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கலாம் என்றுதான் நான் சோனியாவிடம் தெரிவித்தேன்.
பிரணாப் முகர்ஜி முன்னணியில் இருக்கிறாரா என்ற கேள்விக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. இப்போது அதற்கான நேரம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications