சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சசி வழிபாடு!
காஞ்சிபுரம்: சொத்துக் குவிப்பு உள்ளிட்ட வழக்கிலிருந்து விடுபட வேண்டி காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாகியுள்ள சசிகலா சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்தக் கோவிலுக்கு ஏராளமானோர் குறிப்பாக பெரிய பெரிய விஐபிக்கள் வருவது வழக்கம். குறிப்பாக வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து அலை மோதுவது வழக்கம்.
காரணம், இங்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி சாமியைக் கும்பிட்டுச் சென்றார், சாமி, அவர்களை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்து விடுவார் என்று மக்கள் நம்புவதே.
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுபட்டு பிரச்சினைகளிலிருந்து நீங்க வேண்டும் என்று வேண்டி, திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியான வசந்தி ஸ்டான்லி முன்பு சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டி அதிமுக அமைச்சர்களும் சாமி கும்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்து இடையில் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் தோழியாகியுள்ள சசிகலாவும் இன்று வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வழக்கறுத்தீஸ்வரர் கை கொடுப்பாரா...?












Click it and Unblock the Notifications