அத்வானியை குறி வைக்கும் சிபிஐ... கார்த்தி சிதம்பரத்தைத் துரத்தும் பாஜக!

பாபர் மசூதி விவகாரத்தில், அத்வானி உள்ளிட்டோருடைய தூண்டுதல் பேச்சுதான் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணம், எனவே அவர்களை விசாரித்தேயாக வேண்டும், அவர்கள் வழக்கை சந்தித்தேயாக வேண்டும் என்று சிபிஐ கூறியுள்ளது. இதனால் பாஜக தரப்பு நெருக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ஆனால் மறுபக்கம் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை இறுகப் பிடிக்க ஆரம்பித்துள்ளது பாஜக. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் நிதி ஆதாரம் அடைந்தார் கார்த்தி சிதம்பரம் என்பது சுப்பிரமணியம் சாமி மூட்டி விட்டுப் போன புகையாகும். அதை தற்போது பாஜக ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்து விட்டது.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை இன்று எழுப்பிய பாஜக உறுப்பினர்களால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இன்று காலை லோக்சபா கூடியதும் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பியது. பாஜக உறுப்பினர்கள் கூட்டமாக கூடி நின்று ப.சிதம்பரத்தை நீக்கக் கோரி கோஷம் எழுப்பினர். சிலர் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கை முன்பு கூடி கோஷமிட்டனர். அரசு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களை அமைதிப்படுத்த மீ்ரா குமார் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவையை நடத்த முயன்றார் மீரா குமார். ஆனால் எதிர்க்கட்சியினரின் அமளி தொடரவே பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் காணப்பட்டது. முதலில் 10 நிமிடமும், பின்னர் 12 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அமளி ஓயவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications