எதியூரப்பாவின் முன்னாள் 'குடைச்சல்' ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்!

ரெட்டியின் ஓபுளாபுரம் சுரங்க நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி பெல்லாரியில் வைத்துக் கைது செய்யப்பட்டார் ரெட்டி. இவருடன் மைத்துனரும், ஓபுளாபுரம் நிறுவனத்தினஅ நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாச ரெட்டியும் சேர்த்து சிபிஐயால் தூக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் 186 பக்க குற்றப்பத்திரிக்கையாத் தாக்கல்செய்துள்ளனர். இதில் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி, அனந்தப்பூர் மாவட்ட சுரங்கம் மற்றும் மண்ணியல் துறை இயக்குநர் ராஜகோபால், உதவி இயக்குநர் லிங்கா ரெட்டி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் லிங்கா ரெட்டி தற்போது இறந்து வி்ட்டார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் கோரி மனு செய்தார். அதை ஏற்ற சிபிஐ கோர்ட் ரெட்டிக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications