2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பில்லை என நம்புவது வெறும் 10% மக்களே!

Subscribe to Oneindia Tamil

Chidambaram
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பில்லை என்று 10 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ABP நியூஸ் மற்றும் சர்வதேச சர்வே நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து நாட்டில் 28 நகர்களில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில், சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல் மிகுந்த அரசு இப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் என்று 57 சதவீதத்தினர் கூறியுள்ளனர். இந்தக் கருத்தை கடந்த ஆண்டு 45 சதவீதத்தினர் மட்டுமே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டதாக 54 சதவீதத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பிருக்க முடியாது என்று 10 சதவீதம் பேர் மட்டுமே நம்புவதாகக் கூறியுள்ளனர்.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட இப்போதைய அரசு பரவாயில்லை என்று 32 சதவீதம் பேரும், இப்போதைய அரசை விட கடந்த காங்கிரஸ் அரசே பெட்டர் என்று 40 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஊழலை ஒழிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 25 சதவீதம் பேரும், விலைவாசி- பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதே இந்த அரசின் முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்று 24 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

நக்ஸல்களின் வளர்ச்சி கவலை தருவதாக 15 சதவீதம் பேரு கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+