சொத்துக் குவிப்பு வழக்கு: சிபிஐ முன்பு ஆஜரானார் ஜெகன்மோகன் ரெட்டி! எந்த நேரத்திலும் கைது?

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகரெட்டி முதலமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அமைச்சர்கள் பலரது ஆதரவுடன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி என்பது சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் நேற்று ஆந்திர மாநில கலால்துறை அமைச்சர் வெங்கட்ரமணா கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெகனை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சி.பி.ஐ. நோட்டீசும் அனுப்பியிருந்தது. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஜெகன் கைது செய்யப்பட்டால் அவரது ஆதரவாளர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதற்காக ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை ஹைதரபாத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தமது ஆதரவாளர்கள் புடைசூழ ஜெகன்மோகன் ரெட்டி ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் போது ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications