பெட்ரோல் விலை உயர்வில் திமுகவுக்கும் முழுப் பங்கு உண்டு: இடதுசாரிகள்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, கோவை காந்திபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு எதிரான முடிவாகும். மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சி மூன்று ஆண்டு காலம் நிறைவு செய்துள்ள நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வை மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு மக்களுக்காக செயல்படாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. பெட்ரோலுக்காக அதிக தொகை மானியம் கொடுப்பதாகக் கூறும் மத்திய அரசு பெட்ரோல் மீது 50 சதவீதத்தை வரியாகப் போட்டு பணம் ஈட்டி வருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் மீதான வரி மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வருவாய் ஈட்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.
இந்த பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் முழுப்பங்கு உண்டு என்றார்.
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்-தா.பா:
இந் நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரவோடு இரவாக வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தியிருக்கிறார்கள்.
மத்திய அரசு அமெரிக்காவின் சொல்படி செயல்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள மத்திய அரசு மக்களுக்கு அளித்துள்ள பரிசுதான் இது. இன்னும் இரண்டு ஆண்டுகளும் காங்கிரஸ் அரசு நீடித்தால் மக்களிடம் எதுவும் மிஞ்சாது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, மற்ற கட்சிகளைப்போல வெறும் கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக திரும்பப் பெற வேண்டும்.
அரசியல் கட்சி என்ற முறையில் அதிமுகவும் விலை உயர்வுக்கு எதிராக போராட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸையும், அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றார்.
-
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications