என் அம்மாவை கொன்றது முஷாரப் தான்: பெனாசிர் மகன் பிலாவல் குற்றச்சாட்டு

அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிலாவல் இது தொடர்பாக தொலைக்காசி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது
முஷாரப்தான் என்னுடைய அம்மாவை படுகொலை செய்தவர். அவர்தான் இந்தப் படுகொலைக்கு பொறுப்பேற்கவேண்டும். என்னுடைய அம்மாவுக்கு வந்திருந்த மிரட்டல்கள் குறித்து முஷாரப்புக்கு நன்கு தெரியும். முஷாரப்பும் கூட எனது அம்மாவை மிரட்டியிருந்தார். அவர் நாட்டில் எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
முஷாரப்புக்கு பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. இதனால் என்னுடைய அம்மா அவருக்கு எதிராகப் பேசினார். அதைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறேன். கடந்த தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. வரும் தேர்தலில் முக்கியப் பங்காற்றுவேன். என்னால் முடிந்தவகையில் என் நாட்டு மக்களுக்கு உதவி செய்வேன்.
எனக்கு பாகிஸ்தான் அரசு மீது நம்பிக்கை உள்ளது. என்னுடைய தாயாருக்கு பாதுகாப்பைக் குறைத்தது போன்ற ஒருநிலைமை நிச்சயம் இப்போது இல்லை என்றே கூறலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications