கேரளாவில் முன்கூட்டியே துவங்கும் தென்மேற்கு பருவமழை
Subscribe to Oneindia Tamil

ஆண்டுதோறும் கேரளாவில் ஜூன் முதல் தேதி தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்குவது வழக்கம். இதற்கான பருவ நிலை, காற்று ஆகியவை மே மாத மத்தியில் மடாஸ்கர் நாட்டின் கடலோரப் பகுதியில் துவங்கி, இந்தியாவுக்குள் நுழையும் போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கும். அதுபோன்ற சூழ்நிலை தற்போது, வங்க கடலில் உட்பகுதியிலும், அந்தமான் தீவுப் பகுதியிலும் காணப்படுகிறது. இதனால் ஜூன் முதல் தேதி துவங்க வேண்டிய பருவமழை முன்னதாகவே துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து பருவ மழை தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகளோடு மேகக் கூட்டங்கள் மலை முகடுகளை தழுவி செல்லத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications