இங்கிலாந்தில் கல்லறை முன்பு நடந்த காதல் திருமணம்
லண்டன்: காற்று வாங்கக் கூட கல்லறை பக்கம் செல்ல மனிதர்கள் தயங்கும் நிலையில் அங்கு தங்களது திருமணத்தையே தடபுடலாக நடத்தியுள்ளது காதல் ஜோடி ஒன்று.
உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி திருமணம். மேலை நாடுகளில் உள்ள சிலர் தங்களது திருமணத்தை விசித்திரமான முறையில் கடலின் நடுவே, கப்பலில், ஆகாய விமானத்தில் என பல்வேறு முறையில் நடத்துகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டயான் வாலர், ராண்டி ஜார்லேண்ட் என்ற காதல் ஜோடி தங்களது திருமணத்தை கல்லறை ஒன்றின் முன்பு நடத்தியுள்ளனர்.
இவர்கள் இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கல்லறை முன்பு தான் சந்தித்தனர் என்று கூறப்படுகின்றது.
தாய், தந்தை, உறவினர்களின் கல்லறைகளுக்கு மத்தியில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த திருமண நிகழ்ச்சியில் (உயிருடன் இருக்கும்) அவரது உறவினர்களும், அதிமுக்கிய நண்பர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications