ரயில்களில் கடத்தி வரப்பட்ட ஹெராயின், எபிடிரைன்: சர்வதேச மதிப்பு ரூ.13 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், இந்த மாதத்தில் மட்டும் சென்னை வந்த ரயில்களில் இருந்து ரூ.13 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் டெல்லியில் இருந்து செகந்திராபாத் வந்த சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு பயணிகள் 5 பாலிதின் பைகளில் கடத்தி வந்த 65 கிலோ எடையுள்ள எபிடிரைன் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

அதே போல இந்த மாத தொடயில் ரயிலில் பயணம் செய்த 4 பயணிகளிடமிருந்து 6.5 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

கடந்த சனிக்கிழமை, தூத்துக்குடி துறைமுகத்தில், 8.2 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளையும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 82 லட்சம் ஆகும்.

கடந்த 2 மாதங்களில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் 47 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ரூ. 4.7 கோடியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+