1000 அடி மலை உச்சியில் பெண்ணுடன் குஜால்... கையும் களவுமாக மக்களிடம் சிக்கிய ஏட்டய்யா!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 1000 அடி உயர மலை உச்சியில் அங்கன்வாடியில் பணியாற்றும் பெண்ணுடன் பட்டப் பகலில் உல்லாசமாக இருந்த போலீஸ்காரரை ஊரே ஒன்று கூட கையும் களவுமாக பிடித்தது.

களியக்காவிளை அருகே சுமார் 1000 அடி உயர மலை உள்ளது. இந்த மலை உச்சியில் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.

மலை உச்சியில் தொலை தொடர்புக்காக காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வயர்லெஸ் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களுக்கான கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீஸார் ஷிப்ட் போட்டு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகலில் ஒரு போலீஸ்காரர் இங்கு காவல் பணியில் இருந்தார். அப்போது 30 வயதுப் பெண் ஒருவர் மலை மீது ஏறிப் போனார். இதைப் பார்த்த சிறுவர்கள், ஒரு பெண் தனியாக மலை உச்சிக்குப் போவதைப் பார்த்து ஊர் மக்களிடம் போய் சொன்னார்கள்.

கோவிலில் திருட வந்த பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள் மொத்தமாக திரண்டு வந்தனர். மலைக்கு ஏறினர். மேலே போய்ப் பார்த்தபோது வாக்கி டாக்கி ரூமில் அந்தப் பெண்ணும், போலீஸ்காரரும் ஜாலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் மலையிலிரு்நது இருவரையும் கீழே கொண்டு வந்தனர். அந்தப் பெண் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர். அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கல்யாணமாகி பெண் குழந்தையும் இருக்கிறதாம்.

இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட பொதுமக்கள் அப்பெண்ணையும், அவருடன் உல்லாசமாக இருந்த போலீஸ்காரரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+