மரபணு சோதனை- ரத்தம் கொடுத்த என்.டி. திவாரி திடீர் மருத்துவமனை அனுமதி
டெல்லி: தந்தை என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரியை கொடுத்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோகித் சேகர் என்பவர் என்.டி. திவாரியை தமது தந்தை என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மரபணு சோதனைக்காக ரத்த மாதிரியை திவாரி கொடுக்க வேண்டும் என்று பலமுறை நீதிமன்றங்கள் அறிவுறுத்தியிருந்தன. இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு மனுக்களைத் தொடந்து தாக்கல் செய்து கொண்டே இருந்தது திவாரி தரப்பு.
ஒருவழியாக உச்சநீதிமன்றத்தின் கடைசி அறிவுறுத்தலின்படி வியாழக்கிழமையன்று தமது ரத்த மாதிரியை மரபணு சோதனைக்காக கொடுத்தார் திவாரி. இதைத் தொடர்ந்து திவாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி மருத்துவமனையில் நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவாரிக்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications