காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் 119-வது ஜயந்தி மகோற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் 119-வது ஜயந்தி மகோற்சவம் இன்று முதல் நடைபெறுகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீ மகாஸ்வாமிகளின் 119-வது ஜயந்தி விழா இன்று முதல் வரும் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மகோற்சவத்தின்போது தினமும் காலை ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், ஸ்ரீ மஹா ருத்ர ஜபம், நவசண்டி ஜபம் நடைபெறும்.
மேலும் ஸ்ரீ சங்கரபக்த ஜனசபா அறக்கட்டளை சார்பில் வேதபாராயணம், ஸ்ரீ சிவாஸ்தானம் நித்யா பூஜா அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக விசேஷ பாராயணங்கள் நடைபெறும். சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மகாஸ்வாமிகள் தர்ஸன அரங்கில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்படும்.
மகா சுவாமிகளின் ஜயந்தி தினமான ஜூன் 4-ந் தேதி காலை 8 மணி முதல் காலை 11.30 மணி வரை ருத்ர ஏகாதசனி ஜபம், ஹோமம், ஸ்ரீ மஹாருத்ர ஜபம், ஹோமம், நவசண்டி ஜபம், ஹோமம், பூர்ணஹூதி, தீபாரதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சிவாஸ்த்தானம் நித்ய பூஜா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications