தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை- மர்மநபர்களுக்கு வலை!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிரபல ரவுடியான சிவா என்ற சிதம்பரத்தை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் வசிப்பவர் பிரபல ரவுடி சிவா என்ற சிதம்பரம். இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
மேலும் ரவுடி சிவாவிற்கு தூத்துக்குடியில் எதிரிகள் அதிக அளவில் உள்ளதால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் ரவுடி சிவா என்ற சிதம்பரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு சிவாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications