மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!

Subscribe to Oneindia Tamil

Madurai Aadheenam
மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா ஆதரவாளர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தங்களது மகனை மீட்டுத் தரக் கோரி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பெற்றோர் போலீஸாரிடம் கதறியபடி புகார் கொடுத்துள்ளனர். அவர்களை மதுரை ஆதீனமும், நித்தியானந்தா ஆட்களும் துரத்தியடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்துள்ளனர்.

ஒரத்தநாட்டைச் சேர்ந்த திருப்பதி - பூர்ணம் தம்பதியினர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தனர்.

அதில், எங்களது இளைய மகன் ராகவன். இவனை மதுரை ஆதின மடத்தில் நித்தியானந்தா சீடர்கள் அடைத்து வைத்துள்ளனர். ராகவனை தொடர்பு கொண்டு நாங்கள், மதுரை ஆதின மடத்திற்குள் சென்று அவனை மீட்க முயன்றபோது, நித்தியானந்தா ஆட்கள் எங்களை உள்ளே விடாமல் தடுத்து மிரட்டுகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நாங்கள் ராகவனை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு அருகில் உள்ள பிடதியில் தேடி அலைந்தோம். மதுரை ஆதின மடத்தில் ராகவனை அடைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்கள் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, மதுரை ஆதினமும், நித்தியானந்தா சீடர்களும் எங்களை மிரட்டி வெளியே துரத்தினர்.

என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயம் உள்ளது. சட்டவிரோதமாகவும் அடைத்து வைத்துள்ளனர். அவனை மீட்டு எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தனர். இதையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

இதையத் தொடர்ந்து கதிர்வேல் தலைமையிலான போலீஸ் படை மதுரை ஆதீன மடத்திற்குள் சென்றுள்ளது. அங்கு இருப்பதாக கூறப்படும் ராகவனை மீட்டு வரும் வரை அவரது பெற்றோர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+