கொள்ளையர்களை அதிர வைத்த டாஸ்மாக் கடை கல்லா!
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷன் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்றிரவு வேலை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிச் சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து வடபாகம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் வீமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ரேகை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையில் பணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கொள்ளையர்கள் முயற்சி தோல்வியடைந்தது.












Click it and Unblock the Notifications