For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலத்தில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பழங்கள் விற்பனை

Google Oneindia Tamil News

Mangoostan
நெல்லை: குற்றாலத்தில் சீசனை முன்னிட்டு குளிர்ந்த பிரதேசங்களில் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலமாகும். சீசனின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்வர். குடும்பத்தினருடன் சுற்றுலா வரும் பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளித்து முடித்தவுடன் குற்றாலம், ஐந்தருவி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அரிய வகை பழங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.

தற்போது குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், குற்றாலம் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே மங்குஸ்தான், ரம்டான் பழங்கள் விளைகின்றன. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழம் இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி, குற்றாலம் போன்ற பகுதிகளில் கடந்த ஆண்டு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட துரியன் பழம் இந்த ஆண்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குளிர்ச்சியை ஏற்படுத்தும் ரம்டான் ரூ.150 லிருந்து ரூ.400 வரையிலும், மங்குஸ்தான் ரூ.320க்கும், முட்டைப்பழம் ரூ.150க்கும், பிளம்ஸ் ரூ.120க்கும், சப்போட்டா ரூ.30க்கும், பேரிக்காய் ரூ.80க்கும், மாதுளை ரூ.150க்கும், ஸ்டார்புரூட் ரூ.120 ரூபாய்க்கும், கொய்யா, நெல்லி ரூ.40க்கும், மாம்பழம் தரத்திற்கு ஏற்றாற்போல் 20 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
It is season time in Courtallam. So, rare medicinal fruits that grow only in hill stations are now available in Courtallam. Tourists show great interest in buying those fruits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X