நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் ஆனித்திருவிழா: தினமும் கலை நிகழ்ச்சிகள்
நெல்லை: நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு 10 நாட்களும் கல்ச்சுரல் அகாடமி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து கல்ச்சுரல் அகாடமியின் துணை தலைவர் சோனா வெங்கடாசலம் கூறுகையில்,
நெலலையப்பர் கோவில் ஆனித் திருவிழா வரும் 24ம் தேதி துவங்கி ஜூலை 2ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி கல்ச்சுரல் அகாடமியின் சார்பில் 10 நாட்கள் கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியை சாரதா கல்லூரி தாளாளர் சங்கரானந்தா சுவாமி துவங்கி வைக்கிறார்.
அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி முன்னிலை வகிக்கிறார். இதில் மாலை 5.30 மணிக்கு பரதநாட்டியமும், 7.30 மணிக்கு இளம்பிறை மணிமாறன் சொற்பொழிவும் நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு பக்தி பாடல், 7.30 மணிக்கு ஞானசம்பந்தரின் சுழலும் சொல் அரங்கம், 27ம் தேதி சிவலாய நாட்டிய பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி, 28ம் தேதி மாலை 7.30 மணிக்கு மகதி குழுவினரின் பக்தி இன்னிசை, 29ம் தேதி மாலை நரசிம்மர் நாடகம், 30ம் தேதி மாலை நெல்லை கண்ணன் சொற்பொழிவு, ஜூலை 1ம் தேதி பாம்பே ஜெயஸ்ரீ பக்தி இன்னிசை, 2ம் தேதி மாலை 7 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமியி்ன் கிராமிய இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications