பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரதாஸ் மரணம்
மூத்த பத்திரிக்கையாளரும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தலைவருமான டி.எஸ்.ரவீந்திரதாஸ் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 66.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவரான ரவீந்திரதாஸ் கல்லீரல் நோய் பாதிப்பினால் சிலகாலம் அவதிப்பட்டு வந்தார். நோயின் கடுமையினால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் பாதிப்பு தீவிரமடைந்து சிறுநீரகங்களும் செயல் இழக்கவே வியாழக்கிழமை இவர் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீந்திரதாஸின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 66 வயதான ரவீந்திரதாஸ் ஆசிரியப் பணியை விட்டு பத்திரிக்கை துறைக்கு வந்தவர். நீண்டகாலம் பத்திரிக்கையாளராகவும், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும்.மூத்த பத்திரிக்கையாளருமான ரவீந்திரதாஸ் உடல்நல குறைவால் இன்று மரணமடைந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்,இரண்டு மகள் உள்ளனர்.