வாளிக்குள் விழுந்து ஒரு வயது சிறுவன் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வேப்பேரியில் வாளிக்குள் விழுந்து ஒரு வயது சிறுவன் பரிதாபமாக மரணமடைந்தான்.
வேப்பேரியைச் சேர்ந்த குல்தீப் என்பவரின் ஒரு வயது மகன் யாஷ் சுரானா. நேற்று இவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது தாயார் சமையலறையில் பிசியாக இருந்துள்ளார்.
அப்போது சிறுவன் பாத்ரூமுக்குள் போயுள்ளான். அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் எட்டிப் பார்த்த சிறுவன் தவறி உள்ளே விழுந்து விட்டான். நீரில் மூழ்கிய அவன் மூச்சுத் திணறியுள்ளான்.
அவனது சத்தம் கேட்டு ஓடி வந்த தாயார் தனது கணவருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications