எனக்கு பதவியோ, அதிகாரமோ தேவையில்லை, ஆனால்...: சரத் பொன்சேகா
Subscribe to Oneindia Tamil

மாத்தறையில் நடந்த பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில்,
எதிர்கட்சியில் தலைமைக்கான போட்டிகளும், தனிப்பட்ட பிரச்சனைகளும் உள்ளது. இது போன்ற சச்சரவுகள் இருக்கும் வரை அதை வைத்தே இந்த அரசு தப்பித்துவிடும்.
எனவே, பதவி மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்கவும், மக்களின் நன்மைக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எனக்கு பதவியோ, அதிகாரமோ தேவையில்லை. அது போன்ற அதிகாரங்கள் எனக்கு இருந்தபோதும், அதனை தூக்கி எறிந்துவிட்டே மக்கள் முன்பு வந்துள்ளேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது. அதை நான் சிறப்பாக செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications