சங்கரன்கோவில் அருகே மணல் லாரி மோதி மணப்பெண் உள்பட 30 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் மீது மணல் லாரி மோதியதில் மணப்பெண் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

சங்கரன்கோவில் அருகே பெரியகோவிலான்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாடசாமி என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கணபதி மகள் விஜயா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று கழுகுமலை கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. திருமண கோஷ்டியினர் இன்று காலை பெரியகோவிலான்குளத்தில் இருந்து வேனில் கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி ஓட்டினார். வேனில் மணப்பெண் விஜயா உள்பட 30 பேர் இருந்தனர்.

மாப்பிள்ளை மற்றும் பலர் டாடா சுமோவில் பின்னால் வந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியில் எதிரே வந்த மணல் லாரி வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்ததில் மணப்பெண் விஜயா, டிரைவர் கருப்பசாமி, விக்னேஷ், அன்பு செல்வி உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். மணப்பெண் உள்ளிட்ட 6 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ள 24 பேர் பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+