இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 12 வரை சிறையிலடைக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
தலைமன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை ஜூலை 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்று பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த படகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கரை திரும்பாத மீனவர்களைத் தேடி கடலுக்குச் சென்ற மற்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழக மீனவர்கள் அனைவரையும் ஜூன் 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி யூட்சன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சிறையில் அடிஅக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications