இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 12 வரை சிறையிலடைக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

தலைமன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை ஜூலை 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்று பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த படகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கரை திரும்பாத மீனவர்களைத் தேடி கடலுக்குச் சென்ற மற்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழக மீனவர்கள் அனைவரையும் ஜூன் 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி யூட்சன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சிறையில் அடிஅக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+