மும்பை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ அதிகாரி தான் தோட்டாக்கள் கொடுத்தார்: அபு ஜிண்டால்

26/11 மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் டெல்லி போலீசாரிடம் சிக்கினான். போலீஸ் காவலில் உள்ள ஜிண்டால் விசாரணையின்போது மும்பை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி மேஜர் சமீர் அலி தான் 2 கார்ட்டன் நிறைய ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்களை தீவிரவாதிகளுக்கு வழங்கினார் என்றும், அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்து தோட்டாக்களை வழங்கியதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
முன்னதாக சமீர் அலி கராச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மும்பை தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் என்றும், அது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்றும் ஜிண்டால் தெரிவித்திருந்தான்.
மும்பை தாக்குதல்களில் மேஜர் சமீர் அலியின் பங்கு குறித்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் தெரிவித்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications