நாளை முதல்வராக பொறுப்பேற்பு- ஆட்சிக்காலம் முழுசும் பதவியில் இருந்துவேன்: ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை

கர்நாடக முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
சதானதந்த கவுடாவை மாற்றியிருப்பதால் ஒக்கலிகா சமூகத்தினர் கிராமந்தோறும் இதுபற்றி பிரச்சாரம் செய்யப் போவதாக ஒருசிலர் கூறிவருகின்றனர். இதுபற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம். பாரதிய ஜனதா கட்சி என்பது அனைத்து சாதி, மதங்களுக்கும் பொதுவான அமைப்பு. அனைத்து தரப்பு ஆதரவும் பாஜகவுக்கு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் சாதிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது.
நான் முதல்வராக பதவி வகிக்கும்காலத்தில் எவ்வித மனமாச்சரியங்களுக்கும் இடம் இருக்காது. எதியூரப்பா, அனந்தகுமார், சதானந்த கவுடா போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொள்வேன். பாரதிய ஜனதா கட்சி ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்வதற்கு மக்கள் தீர்ப்பளித்திருக்கின்றனர். நாங்கள் நிச்சயம் ஐந்தாண்டுகாலத்தைப் பூர்த்தி செய்வோம். பாஜக அரசுப் பொறுப்பேற்ற நாள் முதலே அரசு கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து பார்த்துவிட்டன. ஆனால் அது நடக்கவில்லை. நடக்காது.
என்னைப் பொறுத்தவரையில் சபாநாயகராக இருந்திருக்கிறேன்.. அமைச்சராக இருந்திருக்கிறேன்.. அதனால் முதல்வராகப் பணியாற்றுவதில் சிக்கல் இருக்காது. அனைத்து 121 எம்.எல்.ஏக்களையும் சமமாக நடத்துவேன். அனைவரும் கட்சி மேலிடத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications