முக்கால்வாசித் தமிழர்களை கொன்று விட்ட வடக்கில் தேர்தல் நடத்தப் போகிறாராம் ராஜபக்சே!
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு கவுன்சில் தேர்தலை நடத்தப் போவதாக ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை இலங்கைப் படையினர் சுடுகாடாக மாற்றி விட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து விட்டனர். பல பகுதிகளில் இன்னும் மக்கள் குடியேறாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கவுன்சில் தேர்தலை நடத்ததப் போகிறாராம் ராஜபக்சே.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் வடக்கு மாகாணத்தில் கவுன்சில் தேர்தலை அடுத்த ஆண்டு (2013) செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பு இங்கு பல பணிகள் செய்து முடிக்க வேண்டியுள்ளன. முதலில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதி கட்ட போரின் போது இங்கிருந்து வெளியேறிய மக்கள் தற்போது இங்கு வந்து மீண்டும் குடியமர்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் மறு வாழ்வு சீரமைப்பு, வெளியேறியவர்களை மீண்டும் குடியமர்த்துதல் போன்றவை முழுமை அடைந்து வருகிறது. இவை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விரைவில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கிறோம். இங்கு வாழும் மக்களின் வாழ்வாதார பிரச்சினையும் உள்ளது. இவை அனைத்தும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் இங்கு கவுன்சில் தேர்தல் நடத்தப்படும்.
வடக்கு பகுதியில் தேவையான இடங்களில் மட்டுமே ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2011) நவம்பர் 28-ந்தேதி முதல் யாழ்ப்பாண சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அது குறித்த தகவல்களை உறுதி செய்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications