விபச்சார விடுதிகளின் சுவர்களை அலங்கரிக்கும் காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்கள்!!
டெல்லி: காணாமல் போன சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்காக அவர்களின் புகைப்படங்களை, விபச்சார விடுதிகளில் மாட்டி வைக்கின்றனராம் டெல்லி போலீஸார். போலீஸாரின் இந்த செயல் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சார விடுதிகளுக்கு வரும் சில நல்லவர்கள் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு தங்களுக்குத் தகவல் தருவார்கள் என்று போலீஸார் இதற்குக் காரணம் கூறுகிறார்கள்.
டெல்லியின் சிவப்பு விளக்குப் பகுதியாக திகழ்வது ஜிபி சாலை. இங்கு பல விபச்சார விடுதிகள் செயல்படுகின்றன. இங்குதான் காணாமல் போன, கடத்தப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்த போஸ்டர்களில் சிறுமிகளின் புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள், அதிகாரிகளின் செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபச்சார விடுதிகளில்தான் கடத்தப்படும் சிறுமிகள் விற்பனை செய்யப்படுகிறார்கள். எனவேதான் காணாமல் போன, கடத்தப்படும் சிறுமிகள் குறித்த புகைப்படங்களை இங்கு வைத்துள்ளோம். இந்த சிறுமிகளின் புகைப்படங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள், அவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications