ராகுல் காந்தி ஒரு வெத்து வேட்டு... சொல்கிறார் யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: ராகுல் காந்தி ஒரு நமுத்துப் போன தோட்டா. இவரை காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
இதுகுறித்து அவர் கூறுகையில், 2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளரக யாரை நிறுத்துவது என்பதை இப்போதே பாஜக தலைமை முடிவு செய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாஜகவால் அமைக்க முடியும் என்ற நிலை வரும்போது மட்டுமே அதுகுறித்து பாஜக யோசிக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி ஒரு நமுத்துப் போன தோட்டா, வெத்து வேட்டு. அவரை காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு நிறுத்தும் என்று நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்புகள் குறைவே என்பது எனது கருத்தாகும்.
நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்துவது குறித்து பாஜகவுக்குள் விவாதம் நடக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதற்கான நேரம் இப்போது வரவில்லை. பத்திரிக்கைகள்தான் இதுகுறித்துப் பேசிக் கொண்டுள்ளன.
இதே மீடியாக்கள்தான் 2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு மோடியை கிரிமினல் என்று வர்ணித்தன. இன்று இதே மீடியாக்கள்தான் மோடியை பிரதமர் வேட்பாளராக வர்ணிக்கின்றன. இதில் எதை உண்மை என்று கூறுவது? என்றார் சின்ஹா.












Click it and Unblock the Notifications