பஸ்ஸ்டாப்பில் நிர்வாணமாக சுற்றிய வாலிபர்: ஓட்டம் பிடித்த பெண்கள்
நெல்லை: காவல்கிணறு பேருந்து நிறுத்தத்தில் நிர்வாண கோலத்தில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள், பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக சுற்றினார். அவரின் கோலத்தை கண்ட மாணவிகள், பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஓர்க்ஷாப்பில் இருந்த இளைஞர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து ஆடைகள் அணிவி்த்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த ஆடைகளையும் சில நிமிடங்களில் கிழித்து எறிந்து விட்டு அந்த வாலிபர் மீண்டும் நிர்வாணமாக உலா வந்தார். அங்குள்ள பல் மருத்துவமனை முன்பு அவர் சுற்றி திரிந்ததால் மாணவிகள் தர்மசங்கடத்துக்கு ஆளாகினர். அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications