அமெரிக்க கடற்படையினர் எச்சரிக்கவேயில்லை, திடீர் என்று சுட்டனர்: தமிழக மீனவர்
துபாய்: துபாய் கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் படகின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படையினர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
துபாய் நிறுவனத்திற்காக ஒரு படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகு அமெரிக்க கடற்படையின் கப்பலை நோக்கிச் சென்றதால் அது தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று நினைத்து அமெரிக்க மாலுமிகள் அதை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். அவ்வாறு சுடுவதற்கு முன்பு தாங்கள் பலமுறை எச்சரித்ததாகவும், அதையும் தாண்டி அந்த படகு தங்கள் கப்பலை நோக்கி வந்ததால் தான் சுட்டதாகவும் அமெரி்கக மாலுமிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அமெரி்க்க கடற்படை கப்பலை சுற்றிச் செல்ல முயன்றபோது தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் காலில் குண்டு பாய்ந்து துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்து முனிராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க மாலுமிகள் எங்களை எச்சரிக்கவில்லை. எச்சரிக்கை ஒலி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அவ்வாறு எந்த ஒலியும் எழுப்பவில்லை. திடீர் என்று அவர்கள் சுடத் தொடங்கினர். அதில் என் நண்பன் குண்டு பாய்ந்து இறந்தான். அந்த நிமிடம் என்ன நடந்தது என்றே எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications