பாஜக மீனவர் அணி மாநில துணைத் தலைவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
குமரி: பாஜக மீனவர் அணி மாநில துணைத் தலைவர் யூஜின் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் யூஜின்(37). பாஜக மீனவரணி மாநில துணைத் தலைவர். அவரது மனைவி சைனி. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக யூஜின் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குழித்துறை ரயில் நிலையம் அருகே பள்ளன்விளை ரயில் தண்டாவளத்தில் ஷாலிமார் விரைவுத் தொடர்வண்டி முன்பு பாய்ந்து யூஜின் தற்கொலை செய்து கொண்டார். அவரது கை, கால்கள் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. சிறிது தூரத்தில் யூஜினின் பைக் மட்டும் தனியாக நின்றது.
இது பற்றித் தகவல் அறிந்த இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூஜின் உடலை கைப்பற்றிக் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 2006ல் குழித்துறை நகராட்சி துணைத் தலைவராக யூஜன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications