மெயின் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: வியாபாரிகள் மகிழ்ச்சி

குற்றாலம் பகுதியில் தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி ஆடி வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் மலைப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து குளித்துச் சென்றனர். மெயின் அருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தபோதும் அஙகும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே மெயின் அருவி மக்கள் கூட்டத்தால் களை கட்டியது. வனப் பகுதியில் விடிய, விடிய பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications